Saturday 23 June 2012

தந்தையுமானவன்

ஈன்ற பொழுதின்
பெரிதுவக்கும் தருணத்தை
என் மனைவிக்கு
பரிசாகத் தந்துவிட்டு

ஈரக்கண்ணாகிப் போன
என் ஓரக்கண்ணை
ஒற்றை விரலால்
ஒற்றி எடுத்துவிட்டு

சொல்லொண்ணா பூரிப்போடும்
எழுதவொண்ணா சந்தோஷத்தோடும்
இன்று புதிதாய் அலர்ந்த
என் இளவரசனை
பெருமிதத்தோடு
பார்த்துக்கொண்டிருக்கிறேன்!

நேற்று வரை,
அம்மாவுக்கு பிள்ளையாகவும்
நண்பனுக்கு தோழனாகவும்
மனைவிக்கு கணவனாகவும்
இருந்த நான்

இன்று முதல்
என் இளவரசனுக்கு
"தந்தையுமானவன்"!

- சுதந்திரன்

No comments:

Post a Comment