ஈன்ற பொழுதின்
பெரிதுவக்கும் தருணத்தை
என் மனைவிக்கு
பரிசாகத் தந்துவிட்டு
ஈரக்கண்ணாகிப் போன
என் ஓரக்கண்ணை
ஒற்றை விரலால்
ஒற்றி எடுத்துவிட்டு
சொல்லொண்ணா பூரிப்போடும்
எழுதவொண்ணா சந்தோஷத்தோடும்
இன்று புதிதாய் அலர்ந்த
என் இளவரசனை
பெருமிதத்தோடு
பார்த்துக்கொண்டிருக்கிறேன்!
நேற்று வரை,
அம்மாவுக்கு பிள்ளையாகவும்
நண்பனுக்கு தோழனாகவும்
மனைவிக்கு கணவனாகவும்
இருந்த நான்
இன்று முதல்
என் இளவரசனுக்கு
"தந்தையுமானவன்"!
- சுதந்திரன்